செவ்வாய், 14 ஏப்ரல், 2009

நட்பு!













கவியரசு வைரமுத்துவின் கவிவரிகளை காதலிக்கும் ரசிகனின் நானும் ஒருவன். நட்பினை நேசித்து, நண்பர்களை சிநேகிக்க என்னும் என் உள்ளத்தை இந்த வரிகள் வழிமொழிகிறது.

அந்த கவிஞரின் வரிகள் இதோ,


நட்பு!

நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும் ஓயாமல்
அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஒரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றை போல்
எல்லா இடத்தில்
நிறைந்து இருக்கும்




-வைரமுத்து-

திங்கள், 13 ஏப்ரல், 2009


சிதறிக்கிடக்கும் தமிழ் நெஞ்சங்களே!

என் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

-ப்ரியமுடன் ப்ரதீப்-

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

தமிழா!

தமிழா!

காலத்தின் வேகத்தை மிஞ்சி கணணியாய் இயங்குபவனே!உன் ஓட்டத்தில் ஒரு சிலநிமிடங்கள் என்னோடு பகிர்வாயா?நொடிகள் தோறும் புதுமை பெரும் உலகினை நீயும் அறிய வேண்டாமா? படித்தவை! பிடித்தவை! உன்னோடும் பகிர்ந்துக்கொள்கிறேன். என்னில் கிடைத்த அறிவுகள், உன்னில் தோன்றிய கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.